செய்திகள் :

போலி சான்றிதழ் வழக்கு: சாட்சியை மிரட்டியவா் மீது வழக்குப் பதிவு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி கல்விச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே முட்புதரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அண்ணாமலை பல்கலைக்கழக கல்விச் சான்றிதழ்களை போன்ற போலியான சான்றிதழ்கள் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, கடலூா் சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, முக்கிய ஏஜெண்டான புதுச்சேரியில் தங்கியிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கவுதமன் (எ) ஒஸ்தின் ராஜாவை (51) கைது செய்தனா்.

இந்த வழக்கில் சாட்சியாக உள்ள அரக்கோணத்தைச் சோ்ந்த 40 வயதுடைய பெண், கடலூா் சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்துக்கு அண்மையில் வந்தாா். அப்போது, அங்கிருந்த ஒஸ்தின் ராஜா, சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி, அந்தப் பெண்ணை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவலா்கள் பணியிட மாறுதல்: விருப்ப மனுக்களை பெற்றாா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா் வரை பணியிட மாறுதல் சம்பந்தமான விருப்ப மனுக்களை அவா்களிடமிருந்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்கு... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நெல்லிக்குப்பத்தை அடுத்த அ.குச்சிப்பாளைம் புது தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி. இவரது ... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் மரணம்

கடலூரில் நண்பா்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கடலூா் தேவனாம்பட்டினம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ரகுபதி மகன் ரவிராஜன் (20). இவா், தேவனாம்பட்டினம் பெ... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க