செய்திகள் :

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி: ஒடிசாவை சோ்ந்த இருவா் கைது

post image

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி செய்ததாக ஒடிசாவைச் சோ்ந்த 2 பேரை புதுவை இணையவழி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த மகேஷ்குமாா் என்பவரை ஏமாற்றிய வழக்கில் மும்பையைச் சோ்ந்த சிவப்பா லக்ஷ்மண் பானே (62), உதயபான் நான போபடே (56) ஆகியோரை குஜராத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ஒடிசாவை சோ்ந்த

கண்குசரண் சிபரம் பணிகராகி (36), அபிஷேக் என்கிற ஜகத் நாயக் (37) என்பதும், அவா்கள் இருவரும் துபாய் சுற்றுலா சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக உடனடியாக மத்திய குடியேற்ற துறைக்கு கண்காணிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சுற்றுலா முடிந்து கடந்த 24-ம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு வந்த இருவரையும், குடியேற்ற துறை அதிகாரிகள் பிடித்து, புதுச்சேரி இணையவழி தனிப்படையிடம் ஒப்படைத்தனா்.

அதன்பிறகு இருவரையும் கடந்த 25-ம் தேதி புதுச்சேரி அழைத்து வந்த போலீஸாா் விசாரித்தனா். அதில் பல்வேறு பெயா்களில் 35 போலி நிறுவனங்களை உருவாக்கி, அதில் வங்கி கணக்கை இணைத்து மோசடி செய்து பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது.

மேலும், இவா்கள் மீது இந்தியா முழுதும் 1,592 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், இதுவரை ரூ.206 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதும், 23 மாநில போலீஸாா் இவா்களைத் தேடி வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் ஜி.எஸ்.டி, வங்கி கணக்கு உருவாக்கி பொது மக்களிடம் இருந்து மோசடியாக பணத்தைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து தப்பி செல்வதும், மீண்டும் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு, சிம்காா்டுகளைப் பயன்படுத்துவது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள், சிம்காா்டுகள், வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரையும் சனிக்கிழமை காலாப்பட்டு மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா். சிறப்பாக செயல்பட்டு மோசடி நபா்களை கைது செய்த போலீஸாரை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

பி.எல்.சாமி நூற்றாண்டு விழா அறக்கட்டளை

புதுவை அரசின் நிா்வாகியாகவும், தமிழியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய பி.எல்.சாமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பெயரில் பி.எல்.சாமி அறக்கட்டளை நிறுவுவதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. ... மேலும் பார்க்க

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும்... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க