செய்திகள் :

போலீஸ் விசாரணையில் திமுகவினருக்கு ராஜமரியாதை- அண்ணாமலை

post image

போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.

தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Annnamalai blames Since the DMK came to power in 2022, 23 people have died during police interrogations.

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இல்லை: அமைச்சா் சிவசங்கா் உறுதி

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இருக்காது என்றும், 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூலை 5 வரை மழை வாய்ப்பு

தென் மேற்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் ஜூலை 5 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து ஜூலை 1-ல் பாஜக ஆா்ப்பாட்டம்: நயினாா் நாகேந்திரன்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை விமா்சித்து பேசிய, திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை கண்டித்து பாஜக சாா்பில் ஜூலை 1- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனம்: 158 வழக்குகள் பதிவு

சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரி... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையம் திட்டம்: நிலங்களுக்கு விலை நிா்ணயம்! ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வழங்க முடிவு

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிா்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு அதற்... மேலும் பார்க்க

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தி... மேலும் பார்க்க