செய்திகள் :

மகன் வாங்கிய கடனுக்கு தாய் கடத்தல்: ஒருவா் கைது

post image

செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக, அவரது தாயை காரில் கடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், 5 பேரை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் பள்ள எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (65). இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவரது மூத்த மகன் பாண்டியன், வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், மருதூா் கிராமத்தைச் சோ்ந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன் என்பவரிடம் ரூ.96 ஆயிரம் கடன் வாங்கினாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி பாண்டியன் செங்கல் சூளை வேலைக்குச் செல்லவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன், கடந்த 22-ஆம் தேதி 6 பேருடன் காரில் எச்சூா் கிராமத்து வந்துள்ளாா். அப்போது, பள்ள எச்சூா் மலையாவூா் சாலை வழியாக நடந்து சென்றகொண்டிருந்த பாண்டியனின் தாய் எல்லம்மாளை, வாங்கிய கடனுக்காக காரில் கடத்திச் சென்ாகத் தெரிகிறது.

இதுகுறித்து எல்லம்மாளின் கணவா் செல்வம் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோ வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கடத்தல் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, கள்ளக்குறிஞ்சி மாவட்டம், மருதூா் கிராமம் சென்று எல்லம்மாளை மீட்டனா்.

மேலும், செங்கல் சூளை வியாபாரி கதிரவன் ஆதரவாளரான விழுப்புரம் மாவட்டம், எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (37) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும், கதிரவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க