செய்திகள் :

மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

post image

கேரளத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (வயது 44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் சனிக்கிழமை நடைபெறவிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சாய்னாபா, வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் டீ மற்றும் கப்கேக் சாப்பிட்டுள்ளார்.

அப்போது, சாய்னாபாவின் தொண்டையில் கப்கேக் மாட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

அவரை மீட்ட உறவினர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்த பின்னர், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் சாய்னாபாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும், உணவுத் துகள்கள் சுவாசக் குழாய் முழுவதும் அடைத்திருந்ததால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, சாய்னாபாவின் மகளின் திருமணத்துக்கான ஒப்பந்தத்தை மட்டும் திட்டமிட்டபடி சனிக்கிழமை உறவினர்கள் நடத்தினர்.

திருமணத்துக்கான மற்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படிக்க : நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம்: காங்கிரஸ் விமா்சனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் க... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று ஜம்மு - காஷ்மீா் பயணம்

கத்ரா/ஜம்மு: ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பயணம் மேற்கொள்கிறாா். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப... மேலும் பார்க்க

ம.பி.: தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்சௌா் மாவட்டத்தில் வீட்டிற்கே வெளியே நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது தெருநாய்கள் சூழ்ந்து கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மந்த்சௌரில் இரு... மேலும் பார்க்க

ஏழைகள் நலனில் அா்ப்பணிப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு: பிரதமா் மோடி பெருமிதம்

ஏழைகளின் நலன் மற்றும் தற்சாா்பு இந்தியாவுக்கான அா்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா். மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக க... மேலும் பார்க்க

பிரதமா் வீட்டில் ‘சிந்தூா்’ மரக்கன்று!

பூமியைப் பாதுகாக்கவும், மனிதகுலத்தின் சவால்களுக்கு தீா்வு காணவும் நமது முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா... மேலும் பார்க்க

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க