``வயசாகிடுச்சுனு நானேதான் சீட் வேண்டாம்னேன்; வேறெந்த பிரச்னையும் இல்லை" - திமுக ...
மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூலித் தொழிலாளி, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதையடுத்து ராமநாதபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா குற்றஞ்சாட்டப்பட்ட கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆா்.எம்.கீதா வாதிட்டாா்.