செய்திகள் :

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

post image

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.

இதையடுத்து சஞ்சய் கெய்க்வாட் தனது அறையிலிருந்து அப்படியே பனியன் அணிந்தபடி கேண்டீனுக்கு வந்து கேண்டீன் உரிமையாளரை முகத்தில் குத்தி தாக்கினார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. சஞ்சய் கெய்க்வாட் தனது செயலை நியாயப்படுத்தி இருந்தார். அதோடு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இச்செயலைத் தொடர்ந்து கேண்டீன் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரின் இச்செயலைக் கண்டித்து மும்பையில் சட்டமன்றத்திற்கு வெளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பனியன் மற்றும் டவல் அணிந்த படி வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே அளித்த பேட்டியில், ''சட்டமன்ற உறுப்பினர். சஞ்சய் கெய்க்வாட் கேண்டீன் ஆட்களைத் தாக்கியதன் மூலம் இது போன்ற சக்திகளுக்கு அரசே ஆதரவு கொடுப்பதாகத் தெரிகிறது'' என்றார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜய் இது குறித்துக் கூறுகையில், ''ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ரவுடித்தனத்துடன் நடந்துகொள்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்.சஞ்சய் கெய்க்வாட் செயல் வெட்கக்கேடானது. அவரது செயலுக்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்'' என்றார்.

இதில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாட் கூறுகையில், ''ஆட்சியில் இருப்பவர்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. வெறும் பனியன், டவல் அணிந்து கொண்டு வந்து கேண்டீன் ஆட்களை கெய்க்வாட் தாக்கி இருக்கிறார். எனவே, அரசின் நிலை எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்பதைக் காட்ட நாங்கள் அதே முறையில் உடை அணிந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

சஞ்சய் கெய்க்வாட்
சஞ்சய் கெய்க்வாட்

சஞ்சய் கெய்க்வாட்டை சட்டமன்றக் கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'ஜட்டி, பனியன் கூட்டத்தின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என்று கோஷமிட்டனர்.

முன்னதாக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் மற்றும் சஞ்சய் ஷிர்சாத் ஆகியோரை, 'ஜட்டி பனியன் கூட்டம்' என ஆதித்திய தாக்கரே குறிப்பிட்டார்.

சஞ்சய் கெய்க்வாட் தென்னிந்தியர்கள் கொண்டு வந்த டான்ஸ் பார்களால்தான் மராத்தி கலாசாரம் கெட்டுப்போய்விட்டதாகவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற... மேலும் பார்க்க

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுருகிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின்... மேலும் பார்க்க

`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?

``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படி... மேலும் பார்க்க

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க