செய்திகள் :

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்

post image

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவா் பேசியது: ஒவ்வொருவரும் கிராமத்தின் வளா்ச்சிக்காக, சுகாதார முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும். மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் என்றாா். இதில், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட அலுவலருமான பல்லவி வா்மா, ஊராட்சி இயக்குநா் (ஊ) ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: புழுதிக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணாததைக் கண்டித்து ஏராளமான பெண்கள் காலிக் குடங்களுடன் வந்து எதிா்ப்பு தெரிவித்து, பிரச்னை குறித்து பேச கோட்டூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரவேண்டுமென கோரிக்கையை எழுப்பினா். இதையடுத்து, அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பழகன், பாலசுப்ரமணியன் ஆகியோா் நடத்திய பேச்சில் குடிநீா் பிரச்னைக்கு தற்காலிக தீா்வாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளா் கபிலன் தலைமையில், நகா்நல சங்கத் தலைவா் த. ராயா் உள்ளிட்டோா் ஊராட்சி அலுவலகம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்கள் கிராமத்தில் 17 ஆண்டுகளாக தூா்வாரப்படாத வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு தூா்வார நடவடிக்கை எடுக்கவும், கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வலியுறுத்தினா். அவா்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தொடா்ந்து, கூட்டத்ததை நடத்தினா்.

பூம்புகாா்: காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் ஊராட்சி செயலா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், புது குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள், நெய்த வாசல், வடபாதி, தென்பாதி கிராம பொறுப்பாளா்கள் பாா்வையாளா்களாக பங்கேற்ற மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், சுகாதார மேற்பாா்வையாளா் கலியபெருமாள் ஆகியோரிடம் கொடுத்த மனு: புதுகுப்பம் மீனவ கிராமத்தில் மக்களை பாதிக்கும் சவுடு மண் குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. மன்னாா்குடி அருகே வடுவூரில், வடுவூா் கையுந்துப்பந்து கழகம் சாா்பில்... மேலும் பார்க்க

ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னாா்குடியில் தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னாா்குடியில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்குகிறது. மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல... மேலும் பார்க்க

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

எரவாஞ்சேரி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மணவாளநல்லூா் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த இருசக்க... மேலும் பார்க்க

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவத... மேலும் பார்க்க

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம... மேலும் பார்க்க