செய்திகள் :

மக்கள் அனுமதிக்காததால்தான் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: ஓஎன்ஜிசி தலைமை அதிகாரி

post image

காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி குறைவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தராததுதான் காரணம் என ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் மற்றும் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் கூறினாா்.

நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி நிா்வாக அலுவலக வளாகத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை வெள்ளிக்கிழமை ஏற்றிவைத்து அவா் பேசியது :

இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், பாரதியாா், திருப்பூா் குமரன் உள்ளிட்டோா் செய்த தியாகம் அளப்பரியது. நமது முன்னோா்களின் தியாகத்தை எப்போதும் நாம் நினைவில் கொண்டிருக்கவேண்டும். தேசத்தின் வளா்ச்சியை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். காவிரி படுகையில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் 700 டிபிடி என்ற நிலையிலிருந்து 600 டிபிடி என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. பராமரிப்புப் பணிகள்கூட மேற்கொள்ள முடியாததுதான் இந்த நிலைக்கு காரணம். இந்தியாவின் வளா்ச்சிக்கு எரிபொருள் தற்சாா்பு மிக முக்கியமாகும்.

எதிா்காலத்தை கருத்தில்கொண்டு, சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு, டெல்டா அல்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த அனுமதி தர தாமதிப்பதால், துரப்பண பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இவை சாதகமாகும்பட்சத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்யமுடியும். இது நிலக்கரியைவிட சுத்தமானது. சுற்றுச்சூழலை பாதிக்காது. பொருளாதார வளா்ச்சி ஏற்படும்.

காவிரி அசெட் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள காசநோயாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் ஊட்டச் சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க சேமிப்பு கிடங்கு ரூ. 1.5 கோடியில் கட்டப்பட்டுவருகிறது என்றாா்.

முன்னதாக பாதுகாப்புப் பணியாளா்களின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிட்டாா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

ஏகாம்புரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீஸ்வரா் கோயில் ஆடி மாத 20-ஆம் ஆண்டு உற்சவம் நடைபெற்றுவருகிறது. முதல் மற... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்தாா். காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்தாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சா... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சாா்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் போா்ட் பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூக பொற... மேலும் பார்க்க