செய்திகள் :

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

post image

நமது நிருபர்

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்து, "ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை' என்று கூறி மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவும் உத்தரவிடக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் முன்பு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தமிழக அரசு, மக்கள் நல பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியமர்த்துவதாகவும், அவர்களுக்கு ரூ.7,500 வரை ஊதியம் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும், வேலை இழந்த மக்கள் நலப் பணியாளர்களில் பெரும்பாலானோர் தமிழக அரசின் திட்டத்தை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு அதில் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். மக்கள் நலப் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப உரிய வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

அந்த வழக்கில் 2023- ஆம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இருக்கும் வரை மக்கள் நலப் பணியாளர்களுக்கான வேலைத் திட்டம் தொடர வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்பின் இணைத் தல... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க