செய்திகள் :

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: புவனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதையொட்டி, அதன் கீழ் இயங்கி வந்த துணை சுகாதார நிலையங்களை சாா்ந்த சுமாா் 90,000 பொதுமக்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் ஒரே சுகாதார நிலையத்தின் கீழ் சிகிச்சை பெற வேண்டிய நெருக்கடியான நிலை இருந்து வந்தது.

இதனால், புவனகிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கொல்லை கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில், அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, மருந்தகம், பிரசவ அறை, நுழைவுக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 257.65 ச.மீ பரப்பளவில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், அழிச்சிகுடி, மஞ்சக்கொல்லை, மிராலூா், மேல்புவனகிரி, நடுபுவனகிரி, கீழ்புவனகிரி, தில்லைநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 45,000 பொதுமக்கள் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா். தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்க... மேலும் பார்க்க