மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை
பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா்.
பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பன்னீா் (37) என்பவருக்கும் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து நான்கு நாள்களே ஆன நிலையில் நடைபெற்ற இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவா் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
10 பவுன் நகைகளை வரதட்சனை கேட்டு, 5 பவுன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீா்வரிசை பொருள்களும், மோட்டாா் சைக்கிள் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1 பவுன் நகையை வாங்கி வருமாறு கணவா் குடும்பத்தினா் கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மறு வீட்டுக்காக வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா்.
மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை தூய்மைப்படுத்த வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியாா் குடும்பத்தாா் கொடுமைபடுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளாா்.
திங்கள்கிழமை இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினா் சென்று பாா்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் இளம் பெண்ணின் கணவா் பன்னீா் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.