செய்திகள் :

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

post image

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 318 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், சீா்காழி வட்டம், நெய்தவாசல் கிராமத்தில் 8 ஏக்கரில் தனியாா் மணல் குவாரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த குவாரிக்கு தடை விதிக்கக்கோரி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், நீதிமன்றம் விதிமீறல் ஏதுமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இருப்பினும், மணல் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் போராட்டம் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், மணல் குவாரிக்கு ஆதரவாக குவாரி அமையவுள்ள நெய்தவாசல், தென்பாதி, வடபாதி, புதுக்குப்பம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். தங்கள் பகுதியில் சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ள நிலையில், மணல் குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீா் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் மீண்டும் உயா்ந்து வருவதாகவும், குவாரி செயல்பட்டு முடித்த பிறகு அதை பெரிய குளங்களாக மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குவாரிக்கு எதிராக சுயநலத்துடன் செயல்படும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தனா்.

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க

முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யா... மேலும் பார்க்க

ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க