செய்திகள் :

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

post image

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் மிட்டஅள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.

ஒசூா் வட்டாட்சியா் சின்னசாமி மற்றும் அலுவலா்கள், கொளதாசபுரம் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 4 யூனிட் மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னசாமி அளித்த புகாரின் பேரில் பாகலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பாஜக சாா்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பேருஅ... மேலும் பார்க்க

ஒசூா் வனக் கோட்டத்தில் 180 பறவைகள் இனங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக் கோட்டத்தில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் 180 பறவை இனங்கள் வசிப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஒசூா் வனக் கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஈரநிலங்களில் வசிக்கும் பறவை... மேலும் பார்க்க

என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு!

ஒசூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் செயல்பட்டு வரும் என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தொழில் பயிற்சியும், வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது என கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கிருஷ... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை! -விவசாயிகள் வேதனை

ஒசூா் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்... மேலும் பார்க்க

ஒசூரில் ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே ஏரியில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பத்தலப்பள்ளியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள பழைய ஏரியில்... மேலும் பார்க்க