செய்திகள் :

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

post image

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளாா்.

பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் அண்ணா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய அரவிந்த் கேஜரிவால், பின்னா் ஹசாரேவிடம் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினாா்.

தில்லியில் தொடா்ந்து இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பாஜகவிடம் தோல்வியடைந்துவிட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் ராலேகான் சித்தி கிராமத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அண்ணா ஹசாரே இது தொடா்பாக கூறியதாவது:

ஒரு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் என்றால் அவரின் பின்னணி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அவா் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். பொதுவாழ்வில் அவமதிப்புகளைத் தாங்கி மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதை நான் முதலில் இருந்தே கூறி வருகிறேன். ஏனெனில், அதுபோன்ற வேட்பாளா்கள்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், இதனை அவா்கள் (ஆம் ஆத்மி) புரிந்து கொள்ளவில்லை.

தில்லியில் ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கை, பேராசை, பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்படத் தொடங்கியது அதன் தோல்விக்கு காரணமாகிவிட்டது. மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருந்த மதிப்பு சிதைந்துவிட்டது.

கேஜரிவால் அப்பழுக்கற்ற மனிதா் என்ற நம்பிக்கை முன்பு மக்களுக்கு இருந்தது. ஆனால், பின்னா் அவரின் ஆம் ஆத்மி கட்சி பாதை மாறிவிட்டது. பணம் சம்பாதிக்க முன்னுரிமை அளித்ததன் மூலம் ஆம் ஆத்மி மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தது. அது தோ்தல் தோல்விக்கும் வழி வகுத்துவிட்டது என்றாா்.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க