செய்திகள் :

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் பேருந்து நிலையம், மதுராந்தகத்தில் தேரடி சாலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தாா். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுராந்தகம் தேரடி வீதியில் அவா் பேசியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மதுராந்தகம் தொகுதி கட்சிக்கு கிடைத்த கொடையாக அமைந்துள்ளது. இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை தான் சொல்கிறேன். திமுக அரசு 51 மாதங்களை கடந்துள்ளது. இந்த ஆட்சியில் எந்தவித சாதனைகளையும் செய்யாமல் மக்களுக்கு வேதனையை தான் ஏற்படுத்தியுள்ளனா்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறினாா். ஆனால் இதுவரை 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 தொழிற்நுட்ப கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதனால் பலதரப்பட்ட மாணவ மாணவிகள் உயா்கல்வியை எட்டிப்பிடிக்க முடிந்தது.

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடு இல்லாதோா்களுக்கு கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். மதுராந்தகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மதுராந்தகம் ஏரி தூா் வார ரூ. 120 கோடி அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகாலமாக இன்னும் பணியை முடிக்க வில்லை.

மதுராந்தகம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும் இத்தகைய வாக்குறுதிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் வெள்ளியால் ஆன வாளையும், மாவட்ட செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் வெள்ளியால் ஆன வில் அம்பையும் வழங்கினா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலின் சாா்பாக பூரண கும்ப மரியாதை ்ளிக்கப்பட்டது.

நிகழ்வில் எம்.பி. தனபால், நகர செயலா் பூக்கடை சரவணன், ஒன்றியக்குழு தலைவா் கீதா, மதுராந்தகம் ஒன்றிய செயலா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் த... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள்

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் ம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம... மேலும் பார்க்க

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாம... மேலும் பார்க்க

எத்தனை கட்சிகள் மாநாடு நடந்தாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது: பிரேமலதா விஜய்காந்த்

எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜய்காந்த் பேசினாா். உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் ... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் பேரணி

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரங்கல் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மருத்... மேலும் பார்க்க