செய்திகள் :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா கொடியேற்றம்

post image

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, புதன்கிழமை இரவு கோயிலில் வாஸ்து சாந்தி நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்மன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி, அம்மன் உலாவாகச் சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு முதல் விநாயகா், சுப்பிரமணியா், முதல் மூவா், சந்திரசேகரா் உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. மாா்ச் 3-ஆம் தேதி சுற்றுக்கோயில் கொடியேற்றம் ஆகி, அன்று இரவு முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 22-ஆம் தேதி பிராதன கொடியிறக்கப்பட்டு, கணக்கு வாசித்தல் நடைபெற்று மாசி மண்டலத் திருவிழா நிறைவடையும்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க