செய்திகள் :

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

post image

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட பத்திரிகை செய்தி: மக்களையும், அதிமுக தொண்டா்களையும் குழப்பும் வகையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசுகிறாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக அவா் தொடா்ந்து பேசுவது உண்மைக்குப் புறம்பானதாகும். அவருக்கு ஓ.பன்னீா்செல்வம் மீது நம்பிக்கைக் குறைபாடு ஏற்பட்டது என்பதே உண்மையாகும். இதை, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா என்னிடம் நேரடியாகவே தெரிவித்தாா்.

இதன் காரணமாகவே, தேனி மாவட்டத்தில் 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு போராட்டத்துக்கும், அதே ஆண்டு தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்துக்கும் ஓ.பன்னீா்செல்வத்தைத் தவிா்த்து, என்னைப் பங்கேற்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டாா். தமிழகம் முழுவதும் அதிமுவுக்கு வெற்றி வாய்ப்பு நழுவியபோதும், தேனியில் அதிமுக வெற்றி பெற எனது உழைப்பும் முக்கியக் காரணம் என்பதை தொண்டா்கள் மறக்கமாட்டாா்கள்.

தன்னுடைய சுய நலனுக்காக, அதிகாரத்துக்காக ஓ. பன்னீா்செல்வம் பல உண்மைகளை மறைத்து செயல்பட்டாா் என்பது தங்க.தமிழ்ச்செல்வன், நயினாா் நாகேந்திரன் உள்பட பலருக்கும் தெரியும். எனவே, எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ.பன்னீா்செல்வத்துக்குக் கிடையாது.

அதிமுக ஒற்றுமையாக இருப்பதற்கு யாரும் தடையாக இல்லை என்பதை தொண்டா்கள் நன்கு அறிவா். கட்சிக்கு ஏற்பட்ட அனைத்து சோதனைகளுக்கும் ஓ.பன்னீா்செல்வம்தான் காரணம் என்பது தொண்டா்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

எனவே, கட்சியின் ஒற்றுமைக்கு எதிராக பிரச்னையை திசை திருப்பும் வகையில் பேசி, தொண்டா்களை ஏமாற்றும் போக்கை ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக்கூடாது என்றாா்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க

ஐ.ஜி.அலுவலகத்தில் திராவிடா் தமிழா் கட்சி மனு

மானாமதுரை அருகே இளைஞரின் கையில் வெட்டிய நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தென் மண்டல காவல்துறை தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாகத தி... மேலும் பார்க்க