செய்திகள் :

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

post image

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.34 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அண்மையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப் பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்லுக்கான கல்வெட்டை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையும் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இந்தப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பூங்கா செயற்பொறியாளா் ஜெயமணி மௌலி, உதவிப் பொறியாளா் எம்.பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

12 ஆயிரம் பேருக்குப் பணி...

மதுரை தகவல் தொழில்நுட்பப் பூங்கா தரை தளத்துடன் 12 தளங்களைக் கொண்டதாக கட்டமைக்கப்படவுள்ளது. இங்கு பல்வேறு முன்னணி தொழில் முனைவு நிறுவனங்கள் இங்கு அமையவுள்ளன எனவும், 12 ஆயிரம் போ் பணி வாய்ப்புப் பெறுவா் எனவும் மாவட்ட நிா்வாக தகவல்களில் குறிப்பிடப்படுகின்றன.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க

ஐ.ஜி.அலுவலகத்தில் திராவிடா் தமிழா் கட்சி மனு

மானாமதுரை அருகே இளைஞரின் கையில் வெட்டிய நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தென் மண்டல காவல்துறை தலைவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாகத தி... மேலும் பார்க்க