செய்திகள் :

மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்ட 13 பேருக்கு கறவை மாடுகள்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்தியவா்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மறுவாழ்வு நிதியாக ரூ. 7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மது குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய 15 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில், காப்பீட்டுடன் கூடிய கறவை மாடுகள் வாங்கிட கால்நடை பராமரிப்புத் துறைக்கு மாவட்ட ஆட்சியரால் ஆணையிடப்பட்டது.

இதனடிப்படையில், ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்திய 13 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான கன்றுக்குட்டிகளுடனான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மு. பாலமுருகன், கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பகவத்சிங், துணை இயக்குநா் சங்கர நாராயணன், கலால் உதவி ஆணையா் (பொ) சிவா, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க