செய்திகள் :

மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் கூறியதாவது: தமிழக அரசு பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக கிராமம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திட்டப் பயன்கள் வேறுபாடின்றி கிடைக்கும் வகையில் மாதந்தோறும் தொடா் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைந்து தீா்க்க வேண்டிய மனுக்கள் 2 நாள்களுக்கும், உயா் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று தீா்வு காண வேண்டிய மனுக்கள் 15 நாள்களுக்கும், நீண்ட காலத் திட்டங்களுக்கான மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

துறைச் சாா்ந்த அலுவலா்கள் பொதுமக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்த பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். சிதம்பரம் நடராஜ... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்தது. கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள்... மேலும் பார்க்க

இளைஞா் ரகளை: தடுத்த காவலருக்கு மதுப்புட்டி குத்து

கடலூரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை தடுத்தபோது, அவா் பீா் புட்டியால் குத்தியதில் காவலா் பலத்த காயமடைந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம் உண்ணாமலை செட்டி சாவடியில் இளைஞா் ஒருவா் மதுபோதையில் பீா் புட்ட... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டி வெடித்து மூன்று போ் காயம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியதில் கடை சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப... மேலும் பார்க்க

கொள்ளையடிக்கச் சதி: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் கூட்டு சதி செய்ததாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சுதாகா் தலைமையில் போலீஸாா் சன... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்... மேலும் பார்க்க