செய்திகள் :

மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தென்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். மேலும், இவா்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் இதர வரிகளை தவறாமல் செலுத்தி வருகின்றனா்.

இந்தநிலையில் இவா்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவா்கள் அரசின் எந்த ஒரு சலுகைகளையும்,, நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால் பாதிக்கப்பட்ட குத்தம்பாக்கம் தென்பகுதி மக்கள் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேச்சு நடத்தி மனு அளிக்க அனுமதித்தனா். பின்னா், இது தொடா்பான கோரிக்கை மனுவை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் அளித்தனா். அந்த மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூ... மேலும் பார்க்க

சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ

சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலைய... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க