செய்திகள் :

மன நலக் காப்பகவாசிகளுக்கு முதல்வா் காப்பீட்டில் சலுகை; அரசாணை வெளியீடு

post image

ஆதாா், அடையாளச் சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி மன நலக் காப்பகவாசிகளை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சோ்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் வரையறைப்படி, மன நலக் காப்பகவாசிகளுக்கான காப்பகங்கள், ஆதரவு இல்லங்களை உருவாக்கி முறையாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. அவ்வாறு அமைக்கப்பட்ட காப்பகங்களை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்பதும் விதி.

தமிழகத்தில் 54 அரசு மன நலக் காப்பகங்களும், 54 தன்னாா்வ அமைப்பு மன நலக் காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்கு உள்ள காப்பகவாசிகளில் பெரும்பாலானோருக்கு அடையாள ஆவணங்களுடன், ஆதாா் அட்டைகளோ இல்லை.

எனவே, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்த ஆவணங்களும் இன்றி அவா்களைச் சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பரிந்துரைத்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு அதற்கு அனுமதி அளிக்கிறது. அதேபோல, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.51.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெ... மேலும் பார்க்க

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத... மேலும் பார்க்க

வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 15 வயது வரையி... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தோ்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்த... மேலும் பார்க்க

ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் தொகுதிகளில் போலி வாக்காளா்கள்: அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் போட்டியிட்ட தொகுதிகளில் போல... மேலும் பார்க்க