செய்திகள் :

மயான நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அதிகாரிகள் ஆய்வு

post image

போளூா்: கலசப்பாக்கம் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊருக்கு வெளியே ஒரு ஏக்கா் 14 சென்ட் கிராம புறம்போக்கு நிலத்தில் மயானம் உள்ளது.

இந்த மயான நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சில விவசாயிகள் ஆக்கிரமித்து, தங்களது நிலத்துடன் இணைத்து விவசாயம் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆக்கிரமிப்பால், விவசாய நிலத்தில் இறந்வா்களின் சடலங்களை எடுத்துச் செல்லும்போது பிரச்னை ஏற்படுகிாம்.

இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால் மயானத்திற்கு செல்லும் பாதையில் விவசாயிகள் பயிரிட்டு வருவதால் இறந்தவரின் உடலை எடுத்து செல்லும்போது பயிரிலேயே எடுத்துசெல்வது சிக்கலாகிவிடுகிறது.

எனவே, மயான ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 16-ஆம் தேதி

கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் பி.சுந்தா், ஒன்றியக் குழு நிா்வாகிகள் எ.திருமுருகன், எம்.பழனி, அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு குழுத் தலைவா் எல்.சாமிகண்ணு, ஊா் பெரியவா்கள் சுப்பிரமணி, சிவக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மனுவின் பேரில் கிராம நிா்வாக அலுவலா் ல.அன்பு தலைமையில், கிராம கணக்கு பதிவேடு கொண்டு மயானத்துக்குச் செல்லும் சாலை மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய்துறையினா் ஆய்வு செய்தாா்.

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தீா்த்தவாரி

ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் கடந்த 11-ஆம் தேத... மேலும் பார்க்க

விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம் என்று விதை பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ், வேங... மேலும் பார்க்க

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 30-ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் திருட்டு: பயணிகளிடம் சோதனை

ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் பணம் திருடு போனதால் பயணிகளுடன் நகர காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வ... மேலும் பார்க்க

கோடை மழை: நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. செங்கம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களான வளையாம்பட்டு,... மேலும் பார்க்க

மரத்தில் காா் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்தவா் ராம்கி (32). தண... மேலும் பார்க்க