செய்திகள் :

மயிலாடுதுறையில் ஜெயின் சமூக பெண் 21 நாள்கள் உண்ணாநோன்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 21 நாள்கள் உண்ணாநோன்பு முடித்த ஜெயின் சமூக பெண்ணை அச்சமூகத்தினா் ஊா்வலமாக அழைத்துச் சென்று சுமதிநாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா்.

ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனா். இவா்களில் என்.எச்.எஸ். குழுமம் எச்.ரமேஷ் ஜெயின் குடும்பத்தைச் சோ்ந்த சேத்தன்குமாரின் மனைவி குஷ்பு செராஃப் 21 நாள்கள் வெந்நீா் மட்டுமே உட்கொண்டு, பா்யூஷன் பா்வா உண்ணாநோன்பு மேற்கொண்டாா்.

விரதம் முடிவடைந்த நிலையில், மயிலாடுதுறை மாருதி நகரில் உள்ள குஷ்பு செராஃபின் வீட்டில் இருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவரை அமா்த்தி, ஜெயின் பக்திப் பாடல்களை பாடியவாறு ஊா்வலமாக ஜெயின் கோயிலான சுமதிநாத் கோயிலுக்கு அச்சமூக மக்கள் அழைத்து வந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருகிய குறுவை நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி: சீா்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீா் இல்லாமல் குறுவைப் பயிா்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: அஞ்சலகங்களில் ஆக.2-ல் பரிவா்த்தனை கிடையாது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி திங்கள்க... மேலும் பார்க்க

கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா

மயிலாடுதுறை: கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் 5-ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவி... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க