செய்திகள் :

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

post image

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 17-ஆவது மாநாடு வியாழக்கிழமை விழுப்புரத்தில் உள்ள சிஐடியு அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.சுபித்ரா தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் கே.பி.சௌமியா மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினாா். மாவட்டச் செயலா் அரிகிருஷ்ணன் ஸ்தாபன வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா்.

வாலிபா் சங்க மாநிலத் தலைவா் எஸ்.பிரகாஷ் மாநாட்டை வாழ்த்தி பேசினாா். மாநில துணைத் தலைவா் தமிழ் பாரதி நன்றி கூறினாா்.

மாநாட்டில் 15 போ் கொண்ட புதிய மாவட்ட குழு தோ்வு செய்யப்பட்டது, மாவட்ட செயலராக மூ.ஜீவானந்தமும், மாவட்டத் தலைவராக சுபித்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.

மரக்காணத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் மதுமிதா, வி.அஜய், உதயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் தம்பதி கைது

விழுப்புரம் அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மனைவி சுபலட்சுமி(24... மேலும் பார்க்க