செய்திகள் :

`மரத்தில் வந்த தண்ணீர்' - மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

post image

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது.

இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணியுள்ளனர். மரத்துக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்கும் பூசி வணங்கியுள்ளனர்.

பின்னர் உள்ளூர் நிர்வாகம் வருவது அதிசய தண்ணீர் அல்ல என்றும், நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தண்ணீர் வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

சஹாரா சொசைட்டி அருகில் உள்ள மெயின் ரோட்டில் இந்த மரம் இருந்துள்ளது. மரத்தைச் சூழ்ந்த மக்கள் கசிந்த நீரை, புனித தண்ணீராக நினைத்தது குடித்தது மட்டுமல்லாமல் அதற்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்திகள் இருந்ததாகவும் நம்பியுள்ளனர்.

எனினும் தண்ணீர் கசிவு பற்றிய செய்திகள் வந்ததுமே பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி (பிசிஎம்சி) அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த மரம், புனித தண்ணீர் பற்றிய வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகியிருக்கின்றன.

இந்த சம்பவம் இந்திய மக்களிடையே மூட நம்பிக்கைகள் எந்த அளவு மலிந்து கிடக்கின்றன என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

மதுராவில் நடந்த சம்பவம்..

கடந்த ஆண்டு இதேபோல மதுராவின் பிரசித்திபெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் இருந்த யானை சிலையில் இருந்து கசிந்த நீரை மக்கள் தீர்த்தமாக எண்ணி பருகினர். மக்கள் அதை 'சரண் அமிர்தம்' என அழைத்தனர்.

பின்னர் அந்த கோவிலின் பூசாரி சிலையில் இருந்து கசியும் தண்ணீர் ஏசியில் இருந்து வெளியேறியது என்பதை விளக்கியுள்ளார்.

பூசாரி கூறியதையும் கண்டுகொள்ளாத மக்கள் தொடர்ந்து அந்த தண்ணீரைப் பிடித்து குடித்து மேலே தெளித்துக்கொண்டனர். இந்த சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க