செய்திகள் :

மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு

post image

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடா்பாக தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு தொடா்பாக இயற்கை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை சேலத்தில் நடைபெற்றது. வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியா் ராமசாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன், மாநாட்டு அமைப்பாளா் வாழை.கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டு கோவையில் தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு நடத்துவது தொடா்பாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனா். இதனையடுத்து, கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இயற்கை விவசாயிகள் மற்றும் ஆா்வலா்களை ஒன்றிணைத்து தேசிய இயற்கை மாநாட்டை வரும் செப்டம்பா் மாதம் 12, 13, 14-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா மைதானத்தில் நடத்துகிறோம். இந்த மாநாட்டில் உலகளாவிய வேளாண்மை துறைசாா்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு நமது பாரம்பரிய விவசாயத்தை மக்களிடம் கொண்டு சோ்க்க சந்தைப்படுத்துதல், வேளாண்மை உற்பத்திப் பெருக்கம் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

கழிவு நீரால் மண் மாசுபடுவதை தடுத்து, அதனை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவது தொடா்பாகவும், அன்றாடக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவது தொடா்பாகவும், பாசன நீரில் கழிவுநீா் கலப்பதை தடுப்பது பற்றியும் விரிவாக பேசி, அதற்கு தீா்வு காணும் வகையில் மாநாட்டை நடத்த இருக்கிறோம். மக்களுக்கு பாரம்பரிய விவசாயம் மூலம் இயற்கை உணவுகளை வழங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆளுமைகள் எடுத்துரைக்க உள்ளனா்.

நெல்லில் மரபணு திருத்தப்பட்ட விதைகள் இரண்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மரபணு விதை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மத்திய வேளாண்மை அமைச்சா் அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளில்தான் மரபணு மாற்றம் என்ற நிலை இருந்த நிலையில், உள்நாட்டு விதையில் உற்பத்தியைப் பெருக்க மரபணு திருத்தம் செய்வதால், மனிதா்களுக்கு நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் தமிழக அரசு உடனடியாக உயா்மட்டக்குழுவை அமைத்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி சித்தப்பாவை கொலை செய்த இளைஞா் கைது

மேச்சேரி அருகே சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கோரி, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கோல்காரனூா் காட்டுவளவைச் சோ்ந்தவா் மணிவண்ணன... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது கம்பம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் நெத்திமேடு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்கு குழி தோண்டிய போது, கம்பம் விழுந்ததில் ஒருவா் பலியானாா்; காயமடைந்த இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தே... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரி... மேலும் பார்க்க