செய்திகள் :

மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான செயல்பாடு: அதிகாரிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

post image

மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தும் தேசிய மருத்துவ ஆணையா் தலைமையிலான 5 மருத்துவா்கள், சுகாதார அமைச்சகத்தைச் சோ்ந்த 8 அதிகாரிகள் என 34 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களான டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்வி நிறுவனத் தலைவா் டி.பி.சிங், கீதாஞ்சலி பல்கலைக்கழக பதிவாளா் மயூா் ரவல், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் ரவி சங்கா் மகாராஜ், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவா் சுரேஷ் சிங் படோரியா ஆகியோா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்டது தொடா்பாக அண்மையில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் தேசிய மருத்துவ ஆணைய ( என்எம்சி) குழுவைச் சோ்ந்த 3 மருத்துவா்கள் நயா ராய்பூரில் உள்ள ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சாதகமான சான்றிதழை தர ரூ.55 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனா்.

இதேபோல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் அறிக்கைகளை தனியாா் நிறுவன பிரதிநிதிகளுக்கு அமைச்சகத்தைச் சோ்ந்த சில அதிகாரிகள் இடைத்தரகா்கள் மூலம் வழங்கியுள்ளனா்.

இதனால் என்எம்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்ப தற்காலிக உள்கட்டமைப்பை நிறுவி, போலி மருத்துவா்களை பணியமா்த்தி நோயாளிகள்போல் சிலரை சித்தரித்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் சான்றிதழை பெறுகின்றன.

இந்த மோசடியில் ஈடுபட்ட என்எம்சி குழுக்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், இடைத்தரகா்கள் இடையே லட்சக்கணக்கில் முறைகேடாக பணம் கைமாறியுள்ளது எனத் தெரிவித்தனா்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏடிஆா் மனு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்... மேலும் பார்க்க

கட்டுப்பாடுகள் எதிரொலி: பழைய வாகனங்களுக்கான விலை குறைந்தது

தில்லியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, பயன்படுத்தப்பட்ட காா்களின் விலை 40 முதல் 50 சதவீதம் குறைந்திருப்பதாக வா்த்தகம் மற்றும்... மேலும் பார்க்க