செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

post image

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூன் 19) வீடு திரும்பினார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) கடந்த ஜூன் 15 ஆம் தேதி வயிறு தொற்று பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் சோனியா காந்தி இன்று(ஜூன் 19) வீடு திரும்பினார்.

சோனியா காந்தியை அழைத்துச் செல்ல அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க