செய்திகள் :

மருத்துவா் தேரணிராஜனுக்கு டிஎம்இ பொறுப்பு

post image

மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் ஜெ.சங்குமணி பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பொறுப்பு கூடுதலாக மருத்துவா் எ.தேரணிராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்வி இயக்குநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை அவா் வகிப்பாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த மருத்துவா் சங்குமணி கடந்த 2023 நவ.14-ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், அவா் ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். புதிய மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேரணிராஜனுக்கு அந்தப் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா பெருந்தொற்று காலம் முதல் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த தேரணிராஜன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி, திலகபா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் நேரில் ஆறுதல்!

மடப்புரத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் நகை காணாமல... மேலும் பார்க்க

கன்னட மொழி குறித்த கருத்துகளை வெளியிட கமல்ஹாசனுக்கு இடைக்காலத் தடை!

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கன்னட மொழி தொடர்பான விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத... மேலும் பார்க்க