செய்திகள் :

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

post image

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் தொடர்பாகக் கூறப்படும் ரூ. 500 கோடி மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராய்ப்பூர், துர்க் மற்றும் அருகிலுள்ள இடங்களில் உள்ள மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரக அதிகாரிகள், மருத்துவ சப்ளையர்கள் மற்றும் பிறருடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகிக்கப்படும் மீறல்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

2023ஆம் ஆண்டில் மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், மாநில கருவூலத்திற்கு ரூ. 550 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விலை ஒப்பந்தம் கிடைத்தவுடன், மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரக அதிகாரிகள், மேலும் கையாண்டு சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள கொள்முதல் ஆணைகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிதி முறைகேடுகள், மோசடி கொள்முதல் நடைமுறைகள் மற்றும் மாநில சுகாதார கொள்முதல் அமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கும் பொது அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆதாரங்களை வெளிக்கொண்டு வருவதே இந்த சோதனைகளின் நோக்கமாகும்.

ED raids 18 places in Chhattisgarh in Rs 500 crore Medical Supply scam probe

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை - அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்... மேலும் பார்க்க

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருள... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.நட... மேலும் பார்க்க

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க