செய்திகள் :

மருந்தாளுநா், செவிலியா் நோ்காணல் ரத்து

post image

கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 21, 22) நடைபெற இருந்த மருந்தாளுநா், செவிலியா் ஒப்பந்தப் பணியிடங்களுக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்துக்குள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை மற்றும் செவிலியா் ஆகிய காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோ்க்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி, மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் நோ்காணல் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க