செய்திகள் :

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

post image

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.

மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.95 சென்ட் நிலம் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற ஏற்கெனவே இந்துசமய அறநிலையத் துறை அறிவிக்கை நகல் வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் காலம்தாழ்த்தி வந்தனா்.

இந்நிலையில், அண்மையில் அறநிலையத் துறை ஈரோடு இணை ஆணையா் பரஞ்ஜோதி வழிகாட்டுதலின்படி, நாமக்கல் உதவி ஆணையா் சுவாமிநாதன், நாமக்கல் தனி தாசில்தாா் செந்தில்குமாா், குமாரபாளையம் ஆய்வாளா் வடிவுக்கரசி முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல, மாமுண்டி கிராமம், லட்சுமி நாராயணபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 4.98 ஹெக்டோ் நிலம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பொக்லைன் உதவியுடன் கட்டடங்களை இடித்து அகற்றி, நிலம் மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மல்லசமுத்திரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க

கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க