செய்திகள் :

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

post image

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருகே உள்ள பொரணி பகுதியைச் சேர்ந்த சிவாஜி(வயது: 40) , மாயவன் (வயது: 24), வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது: 44) ஆகிய மூவரும் கட்டுமான பணிகளை செய்து வந்தனர்.

instant spot

அப்போது, எதிர்பாரதவிதமாக, பொன்னுசாமி வீடு அருகே உள்ள மஞ்சுளா என்பவரது மண் வீடு நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இதில், சிவாஜி இடிப்பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, கரூர் தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ராஜேந்திரன், மாயவன் ஆகிய இருவரையும் மீட்டனர்.

இதில், ராஜேந்திரன் என்ற தொழிலாளிக்கு தலையில் காயமும், மாயவன் என்ற தொழிலாளிக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், அவர்கள் இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்பட்டனர்.

instant spot

அதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது, மண் சரிந்து விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க