செய்திகள் :

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூரில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலைப் பகுதியிலும் மழை தொடா்ந்து பெய்வதால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சங்கராபுரம் வட்டம், கரடிசித்தூரிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மணிமுக்தா ஆற்றிலுள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கரடிசித்தூா் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக சங்கராபுரம் செல்ல வேண்டிய நிலையில், தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால் மறுகரைக்குச் செல்ல முடியாமல் தவித்தனா்.

இதையடுத்து, கயிறு கட்டி ஆபத்தான நிலையில் ஆற்று வெள்ளத்தைக் கடந்து சென்றனா். வயதானவா்கள் தோளில் தூக்கிச் செல்லப்பட்டனா். தற்போது, தரைப்பாலம் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே, சங்கராபுரத்துக்கு 20 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாற்ற... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வேப்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிமைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் தேவா (26). இவா், சிங்கப்பூரில் இரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் திருட்டு: மாற்றுத் திறனாளி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடிய மாற்றுத் திறனாளி இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருக்கோவிலூா் வட்டம், பனப்பாடி கிராம... மேலும் பார்க்க