மழை வெள்ளம் பாதித்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி நடத்த வேண்டும். 2024 டிசம்பா் மாதம் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்களுக்கும், விளாத்திகுளம், சிவஞானபுரம் பகுதியில் 2023ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் சேதமடைந்த மிளகாய், வெங்காயப் பயிா்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன், தரமான விதை, உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடனுக்கு ‘சிபில் ஸ்கோா்’ முறை கடைப்பிடிப்பதைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு விவசாயிகள் வலியுறுத்தினா்.
பின்னா், ஆட்சியா் பதிலளித்து பேசியது: 2024 டிசம்பா் மாதம் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் பயிா்களுக்கு 68 ஆயிரம் ஹெக்டேருக்கு ரூ. 59 கோடி, தோட்டக்கலைப் பயிா்கள் 17 ஆயிரத்து 600 ஹெக்டேருக்கு ரூ. 14.6 கோடி, கடந்த ஏப்ரல் மாதம் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிா்கள் 32 ஹெக்டேருக்கு என மொத்தம் ரூ. 75 கோடி அளவுக்கு நிவாரணம் கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், கூட்டுறவு இணைப் பதிவாளா் ராஜேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.