செய்திகள் :

மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி!

post image

தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 9) அறிவித்துள்ளார்.

ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் கலந்துரையாடினார். மேலும், பாதிப்பு நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பெரிதும் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.

முதலில் ஹிமாசலப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். பின்னர் ஹிமாசலின் காங்ரா பகுதியில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் பல்வேறு வழிகளில் மதிப்பிடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக பி.எம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒதுக்க வேண்டிய நிதி, நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு, கல்வி நிலையங்கள் சீரமைப்பு, பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அத்தியாவசிய பொருள்களுக்கான நிவாரணம் போன்றவை இதில் மதிப்பிடப்பட்டன.

வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கி மற்றும் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதல் உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார். பேரிடர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டார். இத்தகைய இக்கட்டான சூழலில் மாநில அரசுடன் உறுதுணையாக மத்திய அரசு நிற்கும் எனத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில் மாநிலத்திற்கு ரூ. 1500 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார்.

மேலும், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு உதவிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிக்க | ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

PM Modi announces financial assistance of Rs 1500 cr for flood and rain-affected areas in Himachal Pradesh

வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு- அமைச்சா் நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். தில்லியில் புதன்க... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது. முன்னதாக, நா... மேலும் பார்க்க

ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.2,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். இந்திய தொழில், வா்த்தக சம்ம... மேலும் பார்க்க

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க