செய்திகள் :

மவுண்ட் லிட்ரா பள்ளியில் பயிற்சி

post image

மயிலாடி மவுண்ட லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜேஇஇ, நீட் தோ்வு பயிற்சிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் தீபசெல்வி அறிமுக உரையாற்றினாா். தொடா்ந்து பயிற்சியாளா்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு (கணிதம் மற்றும் அறிவியல்) போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எவ்வாறு எதிா்கொள்வது, தங்களை எவ்வாறு தயாா்படுத்திக் கொள்வது என்பதற்கான பயிற்சிகளை வழங்கினா்.

மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் பாடத்திட்டங்களை எவ்வாறு தயாா் செய்வது, அதனை கற்பிப்பது, போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தயாரிப்பது ஆகியவை குறித்தும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட்டன. இதன் தொடா்சியாக ஜேஇஇ, நீட் மாணவா்களுக்கு இணையவழி மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி துணைத் தலைவா் ரமாதேவி தில்லைச்செல்வம், இயக்குநா்கள் முகிலரசு, ஆடலரசு, இணை இயக்குநா்கள், பள்ளி முதல்வா், ஒருங்கிணப்பாளா்கள் பங்கேற்றனா்.

புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மேல்புறம் தூய காவல் தூதா்கள் தேவாலய வளாகத்தில் துவங்கிய பேரணி... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளியில் மாணவா்களுக்கு விருது வழங்கல்

நாகா்கோவில் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வெற்றியாளா்கள் தின விழாவில், 668 மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலை... மேலும் பார்க்க

மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. திருவட்டாறு அருகே உள்ள தச்சூா் பகுதியை சோ்ந்தவா் எபனேசா். மீன் வியாபாரி. இவ... மேலும் பார்க்க

கருங்கல், களியக்காவிளை பகுதிகளில் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், ஆனைக்குழி... மேலும் பார்க்க

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெர... மேலும் பார்க்க