செய்திகள் :

மாட்டு வியாபாரி அடித்துக் கொலை: இளைஞா் கைது

post image

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வியாபாரியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுபாண்டி (70). இவா் வைகை ஆற்றுப் பகுதியில் குடிசையமைத்து மாடுகள் வளா்த்து வந்தாா். இதே பகுதியில் புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த பால்ச்சாமியும் குடிசையமைத்து மாடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், சேதுபாண்டியன் மகன் முத்துராமலிங்கத்துக்கும், பால்சாமி மகன் ராமச்சந்திரனுக்கும் (32) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்பகை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சேதுபாண்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு ராமசந்திரன் தப்பியோடிவிட்டாா்.

திங்கள்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றவா்கள் சேதுபாண்டி கொலை செய்யப்பட்டதைப் பாா்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து சேதுபாண்டியனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனா்.

ராமேசுவரத்தில் விசைப் படகுகள் ஆய்வு பணி ஜூன் 2-இல் தொடக்கம்!

ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள் ஆய்வுப் பணி வருகிற ஜூன் 2-ஆம் தேதி தொடங்குவதாக மீன் வளத் துறை உதவி இயக்குநா் எம்.சிவக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.15.40 லட்சம் கிடைத்தது. சிவக... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின் தடையால் மின் சாதனப் பொருள்கள் பழுது

திருவாடானை, தொண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவாடானை, பாண்டுகுடி, சி.கே.மங்கலம், தொண்டி, நம்புதாளை, எஸ்.ப... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்!

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது மா... மேலும் பார்க்க

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க