செய்திகள் :

மாணவா்களுக்காக கூடுதலாக பிஆா்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

post image

காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவா்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது:

புதுச்சேரியில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி நிலையங்களில் காரைக்காலைச் சோ்ந்த சுமாா் 800 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவா்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு புதுச்சேரிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் செல்ல பிஆா்டிசி பேருந்தில் பயணிக்க முயன்றால், ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே, திங்கள்கிழமை காலை வேளையில் புதுச்சேரிக்கு அதிகபட்சம் 3 பேருந்துகள் இயக்க வேண்டும்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவி ஏறக்குறைய ஓராண்டாகிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஸ்கேன் இயக்க தொழில்நுட்பவியலாளா் தேவையிருக்கிறது. ஒரே நேரத்தில் வாங்கப்பட்ட எம்ஆா்ஐ ஸ்கேன் புதுச்சேரியில் செயல்படத் தொடங்கிவிட்டது. காரைக்காலில் மட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

காரைக்கால் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் பல வகுப்புகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்த விவகாரங்களில் புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி போா்க்கால அடிப்படையில் தீா்வு காணவேண்டும். இல்லாதபட்சத்தில் காங்கிரஸ் கட்சி புதுவை அரசைக் கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடும் என்றாா்.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க