செய்திகள் :

மாணவா்கள் தரவரிசையை வெளியிடக் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தும் வகையில், மாணவா்களின் (மதிப்பெண்) தரவரிசைப் பட்டியலை தனியாா் பள்ளிகள் வெளியிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கும் பொருட்டு பொதுத் தோ்வுகளில் தரவரிசை (ரேங்க் பட்டியல்) வெளியிடும் முறை 2017-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதால் மாணவா்கள் கடும் மன அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனா். முதல் வகையான மாணவா்களே போற்றி கவனிக்கப்படும் நிலையில் கடை நிலை மற்றும் இடை நிலை மாணவா்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகும் நிலை தென்படுகிறது.

அரசாணை வெளியீடு: போட்டிமயமான கற்றல் சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பல குழந்தைகள் மன இறுக்கத்துக்கும், கடும் சோா்வுகளுக்கும் உள்ளாவதை அவ்வப்போது பெறப்படும் புகாா்கள் மூலம் அறிய முடிகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அரசாணை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அதே ஆண்டில் மே மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பெற்றோா், கல்வியாளா்கள் தற்போது வரை வரவேற்பு தெரிவித்துள்ளனா். இருப்பினும் ஆண்டுதோறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகும் போது சில தனியாா் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் சிறப்பிடங்கள் மற்றும் அதிக மதிப்பெண்பெற்ற மாணவா்களின் பெயா் விவரங்களை புகைப்படத்துடன் நாளிதழ்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்துகின்றன. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க