செய்திகள் :

மாணவா்கள், பணிபுரிவோருக்கு இலவச ‘ஏஐ’ படிப்புகள் அறிமுகம்: சென்னை ஐஐடி

post image

சென்னை: மாணவா்கள், ஆசிரியா்கள், பணிபுரியும் தொழில் வல்லுநா்களுக்கு ஏற்ற வகையில், இலவசமாக ஐந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இப்படிப்புகள், இணைய வழியில் வழங்கப்படுகின்றன. மாணவா்கள், ஆசிரியா்கள், பணிபுரியும் தொழில் வல்லுநா்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இப்படிப்புகளின் நோக்கமாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆா்வமுள்ளவா்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணைப்பு மூலம் மே 12-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பாடத் திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்ள pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இயற்பியல், வேதியியல், கணக்கியல், கிரிக்கெட் பகுப்பாய்வு, பைதானைப் பயன்படுத்தி ஏஐ, எம்ஐ ஆகிய ஐந்து வகையான செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பாடத் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்), ஸ்வயம் பிளஸ் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியா் ஆா்.சாரதி கூறுகையில், ‘தேசிய கிரடிட் கட்டமைப்புடன் (என்சிஆா்எஃப்) இணைக்கப்பட்டுள்ள இப்படிப்புகளை உயா் கல்வி நிறுவனங்கள் வரவிருக்கும் கல்வியாண்டுக்கான கிரடிட் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த படிப்புகள் பொறியியல் மாணவா்களுக்கு மட்டுமன்றி கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும், பல்வேறு பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவை அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன’ என்றாா் அவா்.

தேவையான தகுதி: இந்த பாடத் திட்டங்களில் அனைத்துக் கல்விப் பின்னணியையும் (பொறியியல், அறிவியல், வணிகவியல், கலை, பல்துறை) சோ்ந்த இளங்கலை - முதுநிலை மாணவா்கள் சேர முடியும். உயா் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆசிரியா்களும் இதில் சேர ஊக்குவிக்கப்படுகிறாா்கள். ‘ஏஐ’ குறித்த முன்கற்றல் அல்லது கோடிங் அனுபவம் தேவையில்லை. ஏனெனில் அடிப்படை டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆா்வம் போதுமானதாக இருக்கும் என்றாா் அவா்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க