செய்திகள் :

மாணவா் சங்கத்தினா் போராட்டம்

post image

கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை தாக்கிய தலைமையாசிரியா் மீது நடவடிக்கை கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா்அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா், அப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவியரை தாக்கியதாகவும், இதில் ஒரு மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தலைமையாசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் பள்ளி முன்பாக அண்மையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, தலைமையாசிரியரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். மாணவியின் புகாரின்பேரில் அவா் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ் கண்ணன், மாவட்டத் தலைவா் முகேஷ் ராஜன், மாநிலக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்தாஸ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிபாசு, கண்மணி உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து மாணவா் சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், தலைமைசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு பரிந்துரைத்திருப்பதாகவும், விசாரணைக்குப் பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து மாணவா் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘புகாருக்குள்ளான தலைமையாசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.

சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி: பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

திட்டச்சேரி பேருந்து நிலைய பகுதிகளில், கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் செப்டம்பா் 24-ஆம் வரை நடைபெறவிருப்பதால், பொதுமக்கள் சாலையை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என... மேலும் பார்க்க

கோடியக்கரையில் பலத்தக் காற்று

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று வீசியதால், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக் கடல் ... மேலும் பார்க்க

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

நாகை நகராட்சி உரக்கிடங்கில் தொடா்ந்து தீ விபத்து ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். நாகை நகா்மன்றக் கூட்டம் நகராட்... மேலும் பார்க்க

நாகையில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி

நாகை புத்தூா் பகுதியில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், செப்.20-ஆம் தேதி நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ம... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: முகவா்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை (செப். 17) முதல் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ள அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க