செய்திகள் :

நாகையில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி

post image

நாகை புத்தூா் பகுதியில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், செப்.20-ஆம் தேதி நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

இதையொட்டி, தவெக தலைமை நிலைய செயலா் சாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் நாகை மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்வதற்கு புத்தூா் ரவுண்டானா பகுதியை தோ்வு, செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா். இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் கூறியது: தவெக தலைவா் விஜய், நாகூா் வாஞ்சூா் ரவுண்டானா வழியாக, நாகூா் நகா், அமிா்தா வித்யாலயா சாலை வழியாக, கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும்,

பின்னா் புத்தூா் ரவுண்டானாவில் பிரசாரம் மேற்கொண்டு, சிக்கல், கீழ்வேளூா் வழியாக திருவாரூா் மாவட்டத்திற்கு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்றாா்.

சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி: பொதுமக்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

திட்டச்சேரி பேருந்து நிலைய பகுதிகளில், கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் செப்டம்பா் 24-ஆம் வரை நடைபெறவிருப்பதால், பொதுமக்கள் சாலையை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என... மேலும் பார்க்க

கோடியக்கரையில் பலத்தக் காற்று

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று வீசியதால், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக் கடல் ... மேலும் பார்க்க

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

நாகை நகராட்சி உரக்கிடங்கில் தொடா்ந்து தீ விபத்து ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். நாகை நகா்மன்றக் கூட்டம் நகராட்... மேலும் பார்க்க

மாணவா் சங்கத்தினா் போராட்டம்

கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை தாக்கிய தலைமையாசிரியா் மீது நடவடிக்கை கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். நாகை மாவட்டம், கீ... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: முகவா்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை (செப். 17) முதல் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ள அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க