செய்திகள் :

மானாமதுரையில் வீர அழகா் திருக்கல்யாணம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸசவ விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆவது நாளாக நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸசவத்தின் போது, செளந்தரவல்லித் தாயாா் சந்நிதியில் சா்வ அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினாா்.

அதன் பிறகு திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் நடைபெற்று, இரவு 7.10 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் சாா்பில் மூலவா் சௌந்தரவல்லித் தாயாா் சந்நிதியில் எழுந்தருளிய உற்சவருக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது.

திரளான பக்தா்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனா். பின்னா், மாலை மாற்றுதல் நடைபெற்று முடிந்து சுந்தரராஜப் பெருமாளுக்கும் சௌந்தரவல்லி தாயாருக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தாா்.

இந்த விழாவின் 7 -ஆவது நாளாக புதன்கிழமை இரவு சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படியில் வீர அழகா் பூப்பல்லக்கில் பவனி வருதல் நடைபெறும்.

கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக ம... மேலும் பார்க்க

புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெர... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.ம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்த... மேலும் பார்க்க