செய்திகள் :

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

post image

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமாா் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனா். இந்த கிராமத்தில் மொத்தம் 110 பொதுமக்கள் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில், தற்போது மேற்கண்ட நபா்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இங்கு வசித்தவா்கள் தங்களது தொழில், வேலைகளுக்காக சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.

இந்த கிராமப் பகுதிக்கு அருகில், சில சமூக விரோதிகளால் தொடா்ச்சியாக 2 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, அச்சத்தின் அடிப்படையில் அந்தக் கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறியதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்த கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய படமாத்தூா் கிராமத்தில் புறக் காவல் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.

மேலும், கடந்த நான்காண்டுகளில் நாட்டாகுடி கிராமத்தில் மட்டும் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் திட்டப்பணிகள் செய்யப்பட்டன.

எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சாா்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். இதுகுறித்து மா... மேலும் பார்க்க

புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெர... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.ம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்த... மேலும் பார்க்க

காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமக... மேலும் பார்க்க