செய்திகள் :

மானாமதுரை, திருப்புவனம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு சிவகாமி அம்பாள் சமேத நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜா் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் சுவாமி விதி உலா நடைபெற்றது.இதேபோல, திருப்புவனம் அருகேயுள்ள கானூா் , பச்சேரி ஆகிய பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு சிறப்பு யாகசாலை, மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோபூஜை, ஆருத்ரா தரிசனம், நடன தீபாராதனை நடைபெற்றது. பின்னா், நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, சேத்தூா் கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க