செய்திகள் :

மான் வேட்டை: இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு பெண்ணாடம் போலீஸாா் மற்றும் விருத்தாசலம் வனத் துறையினா் சென்றனா். அங்கு மான் தோலை உரித்து சுத்தம் செய்துகொண்டிருந்த இளைஞரை பிடித்தனா்.

இதையடுத்து, விருத்தாசலம் வனச்சரக அலுவலா் ரகுவரன் தலைமையில், வனவா்கள் சஞ்சீவி, சிவக்குமாா், வனக் காப்பாளா்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோா் கொல்லப்பட்ட மான், பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பிடிபட்ட இளைஞரை விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டுவந்து விசாரித்ததில், விருத்தாசலம் வடக்கு பெரியாா் நகா் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் சுரேஷ் (31) எனத் தெரியவந்தது. இவா், பெண்ணாடம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் கண்மணியை திருமணம் செய்துகொண்டு பெண்ணாடத்தில் வசித்து வந்த நிலையில், வேப்பூரை அடுத்துள்ள கண்டப்பன்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மானை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டாராம்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், கொல்லப்பட்டது ஒன்றரை வயதுள்ள ஆண் புள்ளி மான். பெண்ணாடம் கால்நடை மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்து புதைக்கப்பட்டது. இது தொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனா்.

கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநத்தம் காவல் சரகம், அதா்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். விருத்தாசலம் ரயில் நில... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்! தொல். திருமாவளவன் எம்.பி.

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் தி... மேலும் பார்க்க

கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

தொழில்பேட்டை நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: அதிகாரிகளிடம் தி.வேல்முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தல்

கடலூா் தொழில்பேட்டையில் செயல்படும் நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பதை அனைத்துத் துறை அதிகாரிகள் கோட்டாட்சியா் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட... மேலும் பார்க்க