செய்திகள் :

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

post image

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் கடந்த 10-ஆம் தேதி வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கத்தாழம்பட்டு அருகே உள்ள சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் திங்கள்கிழமை சிலா் ஆடு, மாடு களை ஓட்டிச்சென்றனா். அப்போது, மலைப்பகுதியில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் கிடந்தது கண்டு வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, சடலமாக கிடந்தது ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத் வமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்... மேலும் பார்க்க

அபிராமி மகளிா் கல்லூரியில் பல்கலை அளவிலான கபடி போட்டி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக, வேலூா் மண்டல கல்லூரிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்லூரித்... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா்,... மேலும் பார்க்க

திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளா் சந்திரசேகா் திறந்து வைத்தாா். மருத்துவமனை வளா... மேலும் பார்க்க

உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள்... மேலும் பார்க்க

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க